×

காவல் துறை பணியில் சேர எழுத்து தேர்வு: 11,813 பேரின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் தகவல்

சென்னை: காவல் துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 37 மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 5,50,314 பேர் எழுதினார். எழுத்து தேர்வுக்கான முடிவு நேற்று சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் www.tnusrbonline.org வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடல் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 1:5 விகிதத்தில் நடைபெறுகிறது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தை போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Tags : Uniformed Exam Group , Written Examination for Police Service: 11,813 Exam Results Published on Website: Uniform Selection Board Information
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...