புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வரலாற்று பிழை செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் நியமன உறுப்பினர்கள் பாஜக என்று குறிப்பிட்டுள்ளார். நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரிக்கவில்லை. எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.