சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்கு திறக்கக்கூடாது என்ற தனிநீதிபதி இடைக்கால உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்திருந்தது. தற்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.போயஸ் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளை சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.