×

சேரம்பாடி வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டை போட்டதால் பரபரப்பு-செல்போனில் படம் பிடித்த வாகன ஓட்டிகள்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிடும் காட்சியை  பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் கோரஞ்சால், மில்லத்நகர், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று மாலை சேரம்பாடியில் இருந்து கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் பிரதான சாலை அருகே வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிட்டது. அப்போது, அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகளை செல்போனில் படம் எடுத்தனர்.

பிரதான சாலை என்பதாலும், அருகே குடியிருப்புகள் மற்றும் டாஸ்மார் கடை இருப்பதால் காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே, அடிக்கடி குடியிருப்பு பகுதியில் முகாமிடும் யானைகளை சேரம்பாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Cherambati Forest , Pandalur: Two elephants fighting in the Serampadi Koranjal forest near Pandalur.
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...