கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. காடாம்புலியூரில் முந்திரியை இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையில் தீப்பிடித்து பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன. கடலூரில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து முந்திரி ஆலையில் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.