சென்னை: டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போதும் வசூலிக்கப்படுகிறது. டீசல் விலைலிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.