மதுரை: கும்பகோணம் மாசி மகம் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிய வழக்கில் ஆட்சியர் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தஞ்சை ஆட்சியர் ஒருவாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. கும்பகோணம் மாசி மகம் திருவிழாவின் போது டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.