×

ஜம்மூ- காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஒரு போலீஸ் அதிகாரி வீரமரணம்!!

காஷ்மீர்: ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் புட்காம் கிராமம் அருகே பீர்வாவில் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு நேற்று இரவு துப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து மாநில போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய கூட்டுக் குழு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி வீரமரணம் அடைந்துள்ளார். இதனை காஷ்மீர் ஐஜிபி விஜய குமார் உறுதி செய்துள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : militants ,Jammu ,Kashmir , போலீஸ் அதிகாரி
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...