×

தமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 51,101 மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேருக்கு உருமாறிய தொற்று உறுதியாகி உள்ளது.  இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,46,937 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 470 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,30,320 பேர் குணமடைந்துள்ளனர். 4,173 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,444 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona for another 457 people in Tamil Nadu
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...