×

ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் விழுந்து விபத்து: 2 பேருக்கு வலை

செங்கல்பட்டு: நடுரோட்டில் லாரியை மறித்து, டிரைவரிடம் மர்மநபர்கள் 2 பேர் பணம் பறிக்க முயன்றனர். அப்போது, ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பயணிகள் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு ஒரு லாரி புறப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (40), லாரியை ஓட்டினார். செங்கல்பட்டு அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பழவேலி அருகே சென்றபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், திடீரென சாலை நடுவே வந்து லாரியை மறித்து நிறுத்தினர். உடனே, டிரைவர் லாரியை நிறுத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும், லாரியில் ஏறி, டிரைவர் சரவணனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்ைத பறித்து கொண்டு தப்பினர். அந்த நேரத்தில், அவ்வழியாக கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், நடுரோட்டில் நிற்கும் லாரி மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்து நின்றது.

அப்போது, பின்னால் சென்னையில் இருந்து, அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி, ஆம்னி பஸ் மீது மோதாமல் இருக்க இடதுபுறமாக திரும்பியது. அப்போது,  எதிர்பாராத விதமாக, பாறையில் ஏறி ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி சாய்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயமடைந்து, அலறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பயணிகளை மீட்டு மாற்று பஸ் மூலம் அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Container crash ,bus crash ,Omni , Container crashes into Omni bus: Web for 2 people
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி