×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை, வெயில் என தொடர்ச்சியாக பணியாற்றும் வருவாய் துறையினருக்கும், கொரோனா பரவல் காலத்தில், பணியாற்றி உயிரிழந்த வருவாய்துறையினர் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரியும், கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியை ஒரே அரசாணையில்  வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர்,  பதிவுரு எழுத்தர், ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Demonstration ,Revenue Department , Demonstration by the Revenue Department emphasizing the 10-point demands
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி