×

சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்து போலீஸ் ஏட்டு பலி

ஆவடி:   ஆவடியை அடுத்த மிட்டனமல்லி, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வர்கீஸ்(53). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெர்ஸம்மாள் (51). இவர்களது மகன் அமிர்தஜன் (24). இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வர்கீஸ், தனது மனைவி, மகனுடன் வீட்டில் சாம்பார் சாதத்துடன், பீன்ஸ், கேரட் பொறியல் சாப்பிட்டுள்ளார். பின்னர், மாலை அவர்கள் மூவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.  இதனை பார்த்த, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி வர்கீஸ் நள்ளிரவு இறந்தார். மேலும், ஜெர்ஸம்மாள், அமிர்தஜன் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : kills , Vomiting after eating kills police record
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி