×

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஓவியா: டுவிட்டரில் #jaihind #freedomofthought என்ற ஹாஷ்டேக் பதிவு

சென்னை: பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், ‘கோ பேக் மோடி’என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதனைபோல், அரசு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ம் தேதி சென்னை வந்தபோது, டுவிட்டரில் ‘கோ பேக் மோடி’என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

இருப்பினும், பிரதமர் மோடிக்கு எதிராக, தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்த நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் அணி சார்பில் சிபிசிஐடியில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரில், நடிகை ஓவியா பதிவு செய்ததற்கு உள்நோக்கம் இருக்கிறது. அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த மோடிக்கு எதிராக அவர் பதிவு செய்ய என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்று விசாரணை நடத்த வேண்டும். இவரது டிவிட்டர் கணக்கையும் முடக்கி ஐபிசி 124(ஏ), 153(ஏ), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில், #jaihind (ஜெய்ஹிந்த்) #freedomofthought (கருத்துசுதந்திரம்) என்ற இரண்டு ஹாஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது, ஓவியா ரசிகர்களில் 2,200-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் டிடுவிட் செய்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Ovia , Actress Ovia causing a stir again: Hashtag #jaihind #freedomofthought on Twitter
× RELATED ‘கோ பேக் மோடி’ பதிவு: நடிகை ஓவியா மீது சிபிசிஐடியில் பாஜ புகார்