×

பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர்: பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி கோரஞ்சால் மற்றும் மில்லத் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், கொம்பன் என்ற ஒரு யானை கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் மில்லத் நகர் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.அங்குள்ள பாக்கு, தென்னை உள்ளிட்ட மரங்களை உடைத்து தின்று சேதப்படுத்தி வருகிறது. பாக்கு மரத்தை உடைத்து மின் கம்பத்தில் தள்ளியதில் நேற்று அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்து பல மணி நேரம் கழித்து வந்த மின் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.

சமீபத்தில் மூன்று பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு பகுதிக்கு கொண்டு சென்ற நிலையில் மீண்டும் குடியிருப்பு பகுதியில் கொம்பன் யானை சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : areas ,Pandharpur , Pandharpur, residence, wild elephant, fear
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்