கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500 பேரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏராளமானர் பங்கேற்றனர். முற்றுகையில் ஈடுபட்ட மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி,செழியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.