×

மதுரையில் கடனை திருப்பி செலுத்தாத விவசாயியின் வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி : ஒரு வாரமாக மாற்று உடை இல்லாமல் தவிக்கும் குடும்பம்!!

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உடல்நிலை மற்றும் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கடனை திருப்ப செலுத்த முடியாத விவசாயி வீட்டை பூட்டி தனியார் வங்கி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே விரிசங்குளம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் கடந்த 2018ம் ஆண்டு 4.5 லட்சம் கடன் பெற்றார். அத்தொகையில் 7 பசு மாடுகளை வாங்கி தொழில் செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாததாலும் கொரோனா என்பதாலும் கடந்த 2 ஆண்டுகளாக அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்த வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக அவரது மனைவி மற்றும் ஒரு மகள்களான சவுந்தர்யா மற்றும் வித்யா ஆகியோர் மாற்று உடையின்றி தவித்து வருகின்றனர்.குழந்தைகளின் படிப்பிற்கான புத்தகங்களை வீட்டில் இருந்து எடுக்க முடியாமல் அவர்கள் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து பல முறை வங்கி நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை என்ற காரணத்தால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : bank ,Madurai ,house , மதுரை, தனியார் வங்கி,குடும்பம்
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...