ஈரோடு: ஈரோடு சோலார் அரசு மதுபானக்கடை ஊழியர் ராஜன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த ராஜன் முதலுதவி சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுக்கடையை பூட்டிய பின் மதுபானம் கேட்டு தகராறு செய்த நபர்கள் காலி மதுபாட்டிலால் ராஜனை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.