×

எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு நிறைவுவிழா மாணவர்களுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கினார்

சென்னை: எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு நிறைவுவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரிசுகளை வழங்கினார். பெட்ரோலிய பாதுகாப்பு (சேமிப்பு) ஆராய்ச்சி நிறுவனம் பிசிஆர்ஏ சார்பில் நடைபெற்ற எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு மாதத்தின் நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கவர்னர் பன்வரிலால் புரோகித் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்தியன்ஆயில் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில தலைவர் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன், பாரத் பெட்ரோலியம் தென்மண்டல விற்பனைபிரிவு தலைவர் இந்தர்ஜித் சிங், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன தென்மண்டல தலைவர் சந்தீப் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Governor ,Fuel Saving Awareness Closing Ceremony , The Governor presented gifts to the students at the Fuel Saving Awareness Closing Ceremony
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...