×

வரதட்சணையாக 100 சவரன் நகை, கார் கேட்டு டாக்டர் ‘டார்ச்சர்’: மனைவி போலீசில் புகார்

ஆவடி: ஆவடி, சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சிவசங்கரன் (31). இவருக்கும், திருவள்ளூர் அருகே போளிவாக்கம், கோமதி நகரைச் சார்ந்த அனுபிரியா (27) என்பவருக்கும் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அனுப்பிரியா பொறியியல் பட்டதாரி. திருமணத்தின்போது, அனுபிரியாவுக்கு பெற்றோர் 150 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு இனோவா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சிவசங்கரன் மேலும் 100 சவரன் நகைகளும், ஒரு ஆடி காரும், 5ஏக்கர் நிலமும் வரதட்சணையாக வாங்கி வரும்படி மனைவி அனுபிரியாவை சித்ரவதை செய்துள்ளார். இதற்கு, அவரது பெற்றோர் வாசுதேவன், சரஸ்வதி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, அனுப்பிரியா கணவர் சிவசங்கரனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும், இது குறித்து அனுப்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதன்படி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள டாக்டர் சிவசங்கரன், மற்றும் பெற்றோரை தேடி வருகின்றனர்.

Tags : Torcher ,Dr. , Dr. ‘Torture’ asking for 100 shaving jewelry, car as dowry: wife complains to police
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...