×

‘ஜெயலலிதா அரசை விட எடப்பாடி அரசு ஒருபடி மேல்’: அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை வழங்கி, அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘பெண்கள் படிப்பறிவில் பின்தங்கியுள்ளனர். அவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரை பின்பற்றி அதற்கும் ஒரு படி மேலே சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

‘‘இது அம்மாவின் அரசு’’ என முதல்வரே பேசிக் கொண்டிருக்கும் சூழலில், ஜெயலலிதா அரசை விட எடப்பாடி அரசு மேல் என அமைச்சர் கூறியதை கேட்டு அங்கிருந்த அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர். பயனாளிகளிடம் ஆயிரக்கணக்கில் வசூல்: அமைச்சர் பாஸ்கரன் வருகைக்காக பயனாளிகள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்தனர். இதனிடையே சிங்கம்புணரி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் பயனாளிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்வதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் தெரிவித்தனர்.


Tags : government ,Edappadi ,Baskaran ,Jayalalithaa , ‘Edappadi government is one step ahead of Jayalalithaa government’: Minister Baskaran speech
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...