×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கண்டித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை குறைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : protest , arxist communist protest against petrol and diesel price hikes
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...