×

திருடிய சிலையை மீண்டும் கோயிலில் வைத்துச்சென்ற மர்மநபர்கள்: காங்கயம் அருகே பரபரப்பு

காங்கயம்: காங்கயம் அருகே கோயிலில் இருந்து திருடிய சாமி சிலையை, 5 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கோயிலில் வைத்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவில் உள்ளது துண்டுக்காடு கிராமம். இங்கு, குருகிலியம்பாளையத்தில் அழகர் குலத்தவருக்கு சொந்தமான ஸ்ரீவீரமாத்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 11ம் தேதி, விநாயகர் சிலை மர்மமான முறையில் மாயமானது. கிராம மக்கள் சிலையை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 5 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று கோயிலில் மீண்டும் விநாயகர் சிலை இருந்தது. திருடியவர்களே யாருக்கும் தெரியாமல் அதை வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுவரை கோயிலில் காணாமல்போன சிலை திரும்ப வந்ததில்லை. மாயமான சிலை திரும்ப வந்தது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : idol ,Kangayam , Stolen idol, in the temple, mystics, Kangayam
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...