மதுரை: பண மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் தவறுதலாக சேர்க்கப்பட்ட தன்பெயரை நீக்க வேண்டும் என்று ஞானவேல்ராஜா மனு அளித்திருந்தார்.