திருவள்ளூர்: குமிடிப்பூண்டி அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. ஓபுளாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் ஜிஸ்வந்த்(3) நேற்று காணாமல் போன நிலையில் இன்று கிணற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டது. வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தீயணைப்பு படையினர் நீரை வெளியேற்றி சிறுவனின் சடலத்தை மீட்டனர்.