×

டெல்லி குடியரசு தின வன்முறை!: செங்கோட்டையில் வாள் வீசி குழப்பம் ஏற்படுத்திய மணீந்தர் சிங் கைது..!!

டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டையில் வாள் சுழற்றிய மணீந்தர் சிங்கை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  டெல்லியில் குடியரசுதின விழா கொண்டாட்டத்தின் போது விவசாயிகள் பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்தினர்.

பேரணி செங்கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றதால் எதிர்பாரா விதமாக வன்முறை மூண்டு தலைநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இதையடுத்து பேரணி பாதியிலேயே கைவிடப்பட்டது. டிராக்டர் பேரணி வன்முறையில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்ட போலீசார் பஞ்சாப் நடிகர் தீப் சித்துவுடன் சேர்த்து ஜப்பீர் சிங், பூட்டா சிங், சுப்தீர் சிங், இஃபார் சிங், மணிந்தர் சிங் ஆகியோரை கைது செய்ய முயன்றனர்.

அவர்களில் நடிகர் தீப் சித்து, சுப்தீர் சிங், இஃபார் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோட்டையில் வாள் சுயற்றிய மணீந்தர் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு படை பிரிவு மணீந்தர் சிங்-ஐ இன்று கைது செய்துள்ளது. பிட்டம்பூராவில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் இருந்த இரண்டு வாள்களையும் போலீசார் கைப்பற்றினர். தற்போது மணீந்தர் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Tags : Delhi Republic Day ,Maninder Singh ,Red Fort , Delhi, Violence, Red Fort, Sword, Chaos, Maninder Singh, Arrested
× RELATED செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில்...