சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 6ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. பதிண்டா, ஹோசியார்ப்பூர், கபுர்தலா, பதான்கோட், மோகா, அபோகர் மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பஞ்சாபில் 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளும் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. பஞ்சாப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது.