சென்னை: கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பால பணிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய கூடாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நில ஆர்ஜிதம் குறித்து மனுதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை என தெளிவாக தெரிகிறது. நில ஆர்ஜித சட்டத்தின் விதிகளை மீறாமல் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.