சென்னை: கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பளித்தார். தீர்ப்பில், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை. குற்றச்சாட்டு தொடர்பான உரிய ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது” என்றார்.