புதுடெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் கூறியதாவது: நடுத்தர, சாதாரண மற்றும் சேவை தொழிற்சாலைகளுக்கு பேக்டரி உரிமம் வழங்கப்படும். குறிப்பாக ஏற்கனவே உள்ள விதிகளின் படி, தரைத்தளத்திற்கான வரைபடம் உள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இன்டஸ்ட்ரியல் யூனிட் வைத்திருப்போர் என்டிஎம்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தொழிற்சாலை உரிமம் கேட்டு விண்ணப்பிக்கலாம். அனைத்து தளங்களுக்கும் தொழிற்சாலைக்கான உரிமம் வழங்குவதன் மூலம் அதிக வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும். இது சுயசார்பு இந்தியா திட்டத்திற்கும் வலு சேர்க்கும்.இவ்வாறு கூறினார். இதேபோன்ற அனுமதியை சமீபத்தில் தெற்கு மாநகராட்சி நிர்வாகமும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.