×

திருமணம் செய்ய காதலி வற்புறுத்தல்: காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர்: காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்றத்தூர், சிவன் கோயில் சந்து, தச்சர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). அதே பகுதியில் உள்ள கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சதீஷ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயது  இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையில், அந்த பெண்ணின் நடவடிக்கை பிடிக்காததால் சதீஷ்குமார், அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். காதலன் பிரிந்து சென்றதால், ஆத்திரமடைந்த இளம்பெண், என்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும். வேறு யாரையும் திருமணம் செய்வதாக இருந்தால், நடப்பதே வேறு என தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக, சதீஷ்குமார் வியாபாரத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சென்ற சதீஷ்குமார், பின்னர் வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் கதவை நீண்டநேரமாக தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சதீஷ்குமார் தூக்குப்போட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide , Boyfriend, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை