×

மனைவிக்கு கத்தி வெட்டு: கணவனுக்கு வலை

குன்றத்தூர்: திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத தகராறில், மனைவியை கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பூந்தமல்லி, சுமித்ரா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). அரிசி வியாபாரி. இவருக்கும் குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. ஆனால், குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், கணவருடன் கோபித்து கொண்டு கீர்த்தனா பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர, மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு, மாடியில் நின்றபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்தரமடைந்த பன்னீர்செல்வம், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்து, முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். வலி தாங்காமல் அவர் அலறினார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, கீர்த்தனாவின் பெற்றோர் ஓடிவந்தனர். உடனே பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையடுத்து ரத்தவெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பன்னீர்செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Kunrathur, wife, knife cut
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி