×

அதிமுகவே ஒப்புக்கொள்கிறது இது சாராய போதையில் நடக்கும் ஆட்சி: ஆ.ராசா தடாலடி

சென்னை புளியந்தோப்பு மோதிலால் தெருவில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது: ஜனநாயகத்த காப்பாத்த தான் கூவத்தூர்ல இருந்தோம்னு அதிமுககாரங்க சொன்னாங்க. இப்போ, யாரோ ஊத்தி கொடுத்த சாராய போதையில தான் இந்த ஆட்சி நடந்துக்கிட்டிருக்குன்னு உண்மையை ஒத்துக்கிறாங்க.
மின்சாரத்துறையில மிகப்பெரிய கொள்ளை நடந்துட்டிருக்கு.

ஆட்சி மாறினதுமே சம்பந்தப்பட்டவங்க ஜெயிலுக்கு போறது நிச்சயம். தமிழகத்துல மேம்பால பணியெல்லாம் ஆமை வேகத்துல இருக்கிறதா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே சொல்றாரு. ஆனா தமிழகம் முன்னேறிட்டு இருக்குன்னு இங்கிருக்கிற அரசு சொல்லிட்டு இருக்கு. ஒரு எடப்பாடி கிடையாது 7 எடப்பாடி வந்து தமிழகத்துக்கு மோடியை அழைச்சிட்டு வந்தாலும், இங்கே தாமரை மலர வே மலராது. ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி, அதனாலதான் ஜெயலலிதா நினைவிடம் திறக்கிறதுக்கு மோடி வரல. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Atimugha , Atimugha agrees that this is the rule of alcoholism: A.Rasa Thadaladi
× RELATED அதிமுகவில் மாமனார் - மருமகள் போட்டி;...