×

கரூர் அருகே திருமணம் செய்த காதல் ஜோடி விஷம் குடித்தது: காதலன் சாவு, காதலிக்கு சிகிச்சை

கரூர்: கரூர் அருகே திருமணம் செய்த காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் காதலன் இறந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கன்னிமெய்க்கான்பட்டியை சேர்ந்தவர் அஜித்(17). கூலித்தொழிலாளி. பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் ஜெயராமன் மகள் சிவரஞ்சினி(19) என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவருக்கு திருமண ஏற்பாடுகளும் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலர்கள் இருவரும் நேற்று காலை கரூர் மாவட்டம் மணவாடி அடுத்துள்ள கத்தாளப்பட்டி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து மாணவிக்கு காதலன் தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் அங்கிருந்து கத்தாளப்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது 100நாள் வேலைக்கு சென்ற பொதுமக்கள், காட்டுப்பகுதியில் இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை அறிந்து வெள்ளியணை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த இருவரில், காதலன் அஜித் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிவரஞ்சினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த காதலன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,Karur , Love, poison
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...