சென்னை: சேலத்தில் இருந்து சென்னை-ஐதராபாத்-மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.பி.பார்த்திபன் கூறியுள்ளார். சேலம் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்துக்கு பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் இந்த தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும்போது விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.