தென்காசி: தென்காசி மாவட்டம் கரும்புலியூத்து பகுதியில் பேருந்து நிற்காததை கண்டித்து முதியவர் ஒருவர் பேருந்தின் முன்புறம் நின்றவாறே பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஆலங்குளம் அடுத்த கரும்புலியூத்து பகுதியில் நிற்காமல் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முதியவர் ஒரு ஒருவர் ஓடிச்சென்று பேருந்தின் முன்புறத்தில் நின்றவாறே பயணம் செய்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் முதியவர் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.