சென்னை: அண்ணா பல்கலை. எம்.டெக் படிப்புகளில் இந்தாண்டு மாநில இடஒதுக்கீட்டை பின்பற்ற ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற அண்ணா பல்கலை.க்கு உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப் போகிறீர்கள்?என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.