சென்னை: தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று வெளியிட்டார். தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில் கொள்கை வெளியிடப்பட்டது. பல்வேறு நிறுவனங்களுடன் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழ்நாடு தொழில் கொள்கை 2021, சிறுகுறு நடுத்தர தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. ரூ.28,053 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கையிடப்பட்டது என கூறினார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.