×

குலதெய்வ கோயிலில் 108 கிடா வெட்டி விருந்து கத்தியை காட்டி கொள்ளை அன்று கட்டையை போட்டு கொள்ளை இன்று: சீமான் பேட்டி

காளையார்கோவில்: குலதெய்வ கோயிலில் 108 கிடா வெட்டி விருந்து வைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டியில், கத்தியை காட்டி அன்று கொள்ளையடித்ததாகவும், கட்டையை போட்டு இன்று கொள்ளை அடிப்பதாகவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடிகரை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான வீரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கு அவரது மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடைபெற்றது. இதையொட்டி 108 கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.

சீமான் கூறுகையில், ‘‘பிரதமர் அறிவித்த திட்டங்கள் அத்தனையும் சும்மா வெற்று அறிவிப்புதான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டினார்களே... வந்ததா? மத்திய அரசு செய்வதெல்லாம் ஏமாற்று வேலை. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. அன்று இருட்டில் முகமூடி போட்டுக் கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளைக்காரன் கொள்ளையடித்தான். இப்போது கட்டையை குறுக்கே போட்டு (டோல்கேட்) பகல் கொள்ளை அடிக்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை’’ என்றார்.


Tags : Kida ,interview ,Kuladeyva ,Seeman , 108 kida cut at Kuladeyva temple, robbery today by showing a party knife and looting: Seeman interview
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...