×

கொச்சி அருகே குளத்தில் மூழ்கி கன்னியாஸ்திரி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியை ேசர்ந்தவர் தாமஸ், மோனிகா தம்பதியின் மகள் ஜெசினா (45). ெகாச்சி அருகே காக்கநாடு செயின்ட் தாமஸ் கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கான்வென்ட் காம்பவுண்டு அருகே ஒரு குவாரியில் உள்ள பாறை குளத்தில் ஜெசினா மூழ்கி இறந்த நிலையில் காணப்பட்டார். கன்னியாஸ்திரி ஜெசினா காலையில் தலைவலி என்று கூறி பிரார்த்தனைக்காக தேவாலயம் செல்லவில்லை. கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு சில கன்னியாஸ்திரிகளும் அப்போது கான்வென்ட்டில் இருந்துள்ளனர். அவர்கள் ஜெசினாவை காலை 10.30 மணி வரை கான்வென்ட்டில் பார்த்ததாக கூறினர். ஆனால் மதிய உணவுக்கு ஜெசினா செல்லவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்க தயாரான போது, அவர் குளத்தில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.



Tags : Nun ,pool ,Kochi , Nun drowns in pool near Kochi
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...