மதுரை: உயர்மின் கோபுரம் அமைக்க இருக்கும் இடத்தை இந்திய தொழில்நுட்ப கழகம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் முதல் கோவை வரை உயர்மின் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நேதாஜி என்பவர் தாக்கல் செய்த மனு மீது நிபுணர் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.