தருமபுரி: தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக ஆட்சி மோடியின் பினாமி ஆட்சி என தருமபுரியில் கனிமொழி எம்.பி. கூறினார். ஜனநாயக வழியில் வந்திருக்கக் கூடிய ஒரு இயக்கம் திமுக என பேட்டியளித்தார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் என கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் பின்னணியில் உள்ள அதிமுகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க போகிறோம் என தெரிவித்தார்.