டெல்லி: 2019-2020 நிதியாண்டுக்கான அபதாரமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று கணக்கு தாக்கல் செய்யாத ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி, நாளை முதல் கணக்கும் தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது. வருகின்ற மார்ச் 31ம் தேதிக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.