×

ஆஃப்கனிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்!: மறைவிடங்களில் பதுங்கியிருந்த 20 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஹிசாரக்: ஆஃப்கனிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் மறைவிடங்களில் பதுங்கியிருந்த 20 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆஃப்கனிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசு தாலிபன் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நங்கார்ஹர், லோகர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் நேற்று ஆஃப்கன் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிசாரக், ஹேஜாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

இதில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகின. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. லோகர் மாகாணத்தில் நடந்த மற்றொரு வான்வழி தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்தது. இதை தொடர்ந்து, படுகாயங்களுடன் 8 தீவிரவாதிகளை பிடித்துள்ள ஆஃப்கன் படை அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.


Tags : militants ,Afghanistan ,Taliban , Afghanistan, army, attack, 20 Taliban militants, shot dead
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை