சென்னை: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள BDS இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரியில் கலந்தாய்வு தொடங்கியது. தற்போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக கலந்தாய்வு தொடங்கியது. பிற்பகலில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என கூறியுள்ளது.