×

கொலை வழக்கில் தேடப்பட்டவர் மடிப்பாக்கத்தில் பதுங்கிய தூத்துக்குடி ரவுடி கைது:

ஆலந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கதிர்வேல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி 6 பேரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பரத்ராஜ் (28), ரமேஷ் (25) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பரத்ராஜ் செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது, மடிப்பாக்கத்தில் இருப்பது தெரிந்தது. இதுபற்றி தூத்துக்குடி போலீசார் மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது மடிப்பாக்கம் குபேரன் நகர் 1வது குறுக்கு தெருவில் பரத்ராஜ் கட்டிட வேலை செய்து வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்தனர்.

Tags : Thoothukudi Rowdy , Thoothukudi Rowdy arrested in murder case
× RELATED தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி...