ஜம்மு: புல்வாமா தாக்குதலின் நினைவு விழாவில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதலைத் திட்டமிடுள்ளதாக தகவல்கள் கிடைத்தது. அதனால் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தோம் என ஜம்மு காவல் கண்காணிப்பாளர்தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாங்கள் சோஹைல் என்ற நபரைக் கைது செய்து 6-6.5 கிலோ எடையுள்ள கை எரி குண்டுகளை பறிமுதல் செய்ததாக ஜம்மு காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சிங் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சோஹைல் சண்டிகரில் படித்ததாக விசாரணையின் போது தெரியவந்தது, மேலும் இங்கு கை எரி குண்டுகளை நடவுபயன் படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் அல் பத்ர் தன்ஸீமிடம் இருந்து அவருக்கு செய்தி வந்ததாக்க காவல் ஆய்வாளர் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
கை எரி குண்டுகளை வைக்க சோஹைலுக்கு மூன்று நான்கு இலக்கு இடங்கள் வழங்கப்பட்டதாகவும் அதன் பிறகு அவர் ஸ்ரீநகருக்கு ஒரு விமானத்தை எடுத்துச் செல்லவும், அங்கு அல் பத்ர் தன்ஸீமின் ஓவர் கிரவுண்ட் தொழிலாளி அதர் ஷகீல் கான் என்பவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக ஜம்மு காவல் ஆய்வாளர் முகேஷ் சிங் தகவல் கூறியுள்ளார்.