சென்னை: புல்வாமா தாக்குதலை எந்த இந்தியராலும் மறக்க இயலாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது பாதுகாப்பு படையினரை நினைத்து பெருமை கொள்வோம். கொரோனாவுக்கு எதிரான உலகின் போரை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவுகின்றன. உலகம் இதனை தான் இந்தியாவிடம் எதிர்பார்த்தன எனவும் கூறினார்.