×

மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவும் உள்ளது: மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி: வைகோ பேட்டி..!

சென்னை: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், அதிமுக சார்பிலும், திமுக சார்பிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,  மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவும் உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : state government ,slave ,government ,chief minister ,MK Stalin ,interview ,Vaiko , MK Stalin, Chief minister , Vaiko, Interview
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...