×

செய்யும் தொழிலே தெய்வம்... டெலிவரிக்கு சில மணி நேரங்கள் முன்பு வரை அலுவலகத்தில் பணி செய்த ஜெய்ப்பூர் மேயர்!.. குவியும் பாராட்டுக்கள்!!

ஜெய்ப்பூர் : குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலகத்தில் பணி செய்துவிட்டு சென்ற ஜெய்ப்பூர் மேயர் டாக்டர் சவும்யா குர்ஜாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூர் நகர் நிகாம் (கிரேட்டர்) மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார் வியாழக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு தனது குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்பு இரவு வரை தொடர்ந்து பணியாற்றி உள்ளார்.தனது குழந்தையை பெற்றெடுக்கும் நிலையிலும் பல்வேறு பணிகளை இழுத்துப்போட்டு செய்துள்ளார் ஜெய்ப்பூர் மேயர் சவும்யா குர்ஜார்

இதுகுறித்த ஒரு ட்வீட்டில், சவும்யா கூறியதாவது: செய்யும் தொழிலே தெய்வம்! புதன்கிழமை இரவு வரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பிரசவ வலிக்கு பின்னர் அதிகாலை 12.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை கடவுளின் ஆசீர்வாதங்களுடன் நான் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தேன், என்று சவும்யா குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானில் பதவியில் இருந்தபோது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் சவும்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.



Tags : Goddess ,Mayor ,office ,delivery ,Jaipur , ஜெய்ப்பூர் ,மேயர்
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...