ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த சிறுமாத்தூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (எ) மணவாளன் (33). பிரபல ரவுடி.. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வாழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று பூபாலன், தனது நண்பர்கள் கார்த்திக், கிருஷ்ணா, பிரசாந்த் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது, போதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், பூபாலனை, கத்தியால் குத்திவிட்டு தப்பினர். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.